Thursday, May 7, 2009
நெல்லையில்" வல்லினம் தமிழர் களம்" காங்கிரசுக்கு எதிராக நடத்திய நூதன போராட்டம்
Staff Reporter
Do not support the Congress in Parliamentary polls: youth
EMOTIONAL APPEAL: A youth appealing to voters in a bus in Tirunelveli.
TIRUNELVELI: Even as leaders and cadres of the political parties are appealing to the voters to support their candidates, a group of youths, attached to ‘Vallinam Thamizhar Kalam’, is falling at the feet of every voter with an appeal: “Don’t support the Congress in the ensuing Parliamentary polls”.
The reason, according to them: “The national party failed to protect the Sri Lankan Tamils”.
The youths, who got into every bus parked at Tirunelveli Junction bus-stand on Saturday evening, explained loudly the situation prevailing in Sri Lanka and the attacks being unleashed by the armed forces. The placard hanging from the neck of one Siva said that the Tamil race would not support the Congress, which “failed” to save the Sri Lankan Tamils.
“Innocent children, women, aged and the physically challenged who don’t carry any arm, are being hunted down in the heavy shelling and aerial attack. The Congress Government at the Centre, which has the duty of protecting the Tamils from being wiped out, is not willing to do so. Hence, my dear Tamil voters don’t support the Congress candidates in the election,” they said, even as some of the women passengers started crying and the men voters are listening to them seriously.
Once the speech is over, they fell at the feet of every voter and pressed their only appeal once again.
“We’ll visit all the constituencies wherever the Congress has fielded its candidates,” they said.
-The Hindu(may 3)
Tuesday, April 28, 2009
Saturday, August 2, 2008
அமீபா To அகிலாண்டம்
பூமியின் சுற்று அதற்கான விதிகளுடன் தடையுறாது சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது...ஆனால் அதன் முக(ங்கள்)ம் மட்டும் அது சார்ந்த விலங்கின் மிச்சங்களால் கிழிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது,
ஜாதி,மதம்,இனம்,மொழி,விஞ்ஞானம் என அதன் கூர் நகங்களால் குதறப்பட்டுக்கொண்டே வருகிறது.
விஞ்ஞானத்தால் சிற்சில நன்மை இருப்பினும் அதன்வீச்சு பஞ்சபூதங்களையும் பகைத்துவிட்டது.
வானைத்துளைத்து ஓசோன் ஓட்டை இடுவதிலும்,காற்றைக் கிழித்து கார்பன் துகள்கள் நடுவதிலும்,தன் கழிவுகளால் நீரின் மூலக்கூறுவையே மாற்றுவதிலும்,பச்சை விரிக்கும் காடுகள் அழித்து கான்கிரீட் காடுகள் அமைப்பதிலும்,திட வடிவில் நெருப்பை ஏவி குண்டுகள் என கும்மாளமிடுவதிலும்..புல் பூண்டு,புழு பூச்சிகள் முழைக்காவண்ணம் கதிவீச்சுக்களின் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதிலும் என விஞ்ஞானத்தி வீச்சு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது...
எங்கும் வன்முறை ,மனிதனை மனிதனே கொன்று குவிக்கும் பயங்கரம்,சுடப் பட்டும்,சுட்டுக்கொண்டும் இருக்கும் கொடூரம் என இதே நிலை இன்னும் நீடித்தால் மூன்று பகுதி நீரால் நிரம்பியிருக்கும் பூமி மிச்சமுள்ள ஒரு பகுதியையும் நீரால் நிரப்பக்கூடும்,அந்த நீர் மனித இனத்தின் கண்ணீராகவும் மானுடக்குருதியின் செந்நீராகவும் இருக்கக்கூடும்.
அட மனிதப்பாவிகளே!
உலகம் இப்படித்தான் இருந்தது என்று நாளைய உயிருக்கு எடுத்துச் சொல்ல ஓர் உயிர்தடையத்தையாவது விட்டுச் செல்வோமே..!!!
ஏனெனில் இனி சாத்தியமில்லை அமீபா தொடங்கி,அகிலமும் நிரம்பும் பரிணாம வளர்ச்சி.
Sunday, July 27, 2008
இப்படிக்கு தீவிரவாதி....
எங்கள் கடவுள்
ஒரு இரத்தக் காட்டேறி!
மானிடக் குருதியே
அவர்தம்
அபிசேகத்திற்குரியது என்பதாலும்,
அபிசேகப் பிரியர்
அவர் என்பதாலும்
மானுடக் குவியலைக்
கொன்று குவிக்கிறோம்
கடவுளின் போர் என
வென்று மகிழ்கிறோம்.....
எங்களின்
சந்தோசம்
நிம்மதி
மோட்சம்
முக்தி
எல்லாம் எல்லாம்
மனிதக் குருதியே...
எங்களின் கொள்கை
இரத்தம்!இரத்தம்!இரத்தம்!
எங்களின் இலட்சியம்?!
இது வரை தெரியாது...
எங்கள்
தாயின் மார்புகள்
பால் சுரப்பதை விட
இரத்தம் சுரப்பதையே
அதிகம் விரும்பும்
வித்தியாசப் பிறவிகள்
நாங்கள்..
எங்கள் பூங்காக்களை
புல்லட்டுகள் பூப்பிக்கவே
பயன்படுத்துவோம்...
ஆலயங்கள் தோறும்
அணுகுண்டு விளைவித்து
எங்கள்
மகசூலைப் பெருக்குவோம்..
எம் கடவுள்
புசிக்க ஏதுமில்லாது
பசித்துக் கிடக்கையில்
எம் உயிரையே வெடித்து
சுவைக்கக் கொடுப்போம்..
மனித வெடிகளாய்
எம்மையே சமைப்போம்..
தாத்தா,பாட்டி
அம்மா,அப்பா
மாமா,மாமி
சித்தப்பா,சித்தி
அண்ணன்,அக்கா
தம்பி,தங்கை
மருமகன்,மருமகள்
மதனி,கொழுந்தியா என
உங்களைப் போல்
உறவுகள்சொல்லி
சிரித்து வாழ
எங்களால் இயலாது...
ஏனெனில்
நாங்கள்
விலங்கின் கடைசி மிச்சம்..
விலங்குகட்கு ஏது
சிரிப்பு?
ஆமாம்!
மனிதனைக் கொல்கிறோம்
மனிதனைக் கொல்கிறோம்
என்று
மார்தட்டிக்கொள்(ல்)கிறோமே...
அப்படியானால்.....
நாங்கள்.....???????????????
இப்படிக்கு
தீவிரவாதி......
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருடன் சந்திப்பு
இயக்குனர் இமையம் திரு பாரதி ராஜா மற்றும் மலேசிய அமைச்சர் திரு டத்தோ சாமிவேலு ஆகியோருக்கான தசாவதார படத்திற்கான சிறப்புக் காட்சி four frames studio வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.....இயக்குனர் இமைய உபயத்தால் அடியேனும் அந்த சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டேன்....அப்பொழுது இயக்குனர் திரு கே.எஸ்.ரவிகுமார் அவர்களை சந்தித்து இணையதள விமர்சனங்கள் குறித்து விவாதித்தேன்....சில விமர்சனங்கள் அவரை பாதித்துள்ளது....முன்னதாக அவரது அயராத உழைப்பின் சாதனைக்கு தலைவணங்கினேன்....இணையதள விமர்சனங்கள் குறித்த எனது பதிவையும் அவரிடம் காண்பித்தேன்... 
(அலை பேசியில் படம் பிடித்தவர் அறைகுறையாய் படம்பிடித்துவிட்டார்)
Friday, June 20, 2008
தசாவதாரம் Vs விமர்சனங்கள்
வலைபூக்களில் சமீபத்தில் பெரிதும் பதிவிடப்பட்டது தசாவதாரம் திரைப் படம் குறித்த விமர்சனங்களே...
விமர்சனம் மிக முக்கியம் என கருதுபவன் நான்,,நான் ரசிகனாய் இருப்பதை விட விமர்சகனாய் இருப்பதையே பெரிதும் விரும்புகிறேன்..நம் பார்வைத் தரம் உயர்ந்துள்ளதும் வரவேற்கத் தக்கதே..அதற்காக விளையாட்டுக்காய் விமர்சித்துத் தள்ளாதீர்கள்....
விமர்சனங்களே கலைஞனை செதுக்குகிறது,குறைகளை நிறைமதியோடு சுட்டிக்காட்டினால் நிச்சயம் கலைஞன் அதை ஏற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்வான்...
நுணுக்கமான செதுக்கல்களே கல்லை சிற்பமாக்கும்..உங்கள் விமர்சனங்கள் கலைஞனை செதுக்கும் உளியாகமட்டுமே இருக்கட்டும் தயவு செய்து கடப்பாறை கம்பி எடுத்து காயப்படுத்தாதீர்கள்..
சொல்லுதல் யார்க்கும் எளியதுதான்...நம்மால் பிரசவ வலியை பார்க்கத்தான் முடியும் ஆனால் உணர்வு என்பது அந்த குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்குமட்டுமே பரீட்சையம்.....visual படுத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
என்னதான் ஒரு சினிமா படைப்பாளி தான் நினைத்ததை,தன் வாழ்வில் அள்ளிமுடித்த யதார்த்தங்களை,கதாப்பாத்திரங்களை,காட்சிப்பதிவுகளை அப்படியே திரையில் கொண்டுவர நினைத்தாலும் அதற்கு அவர்மட்டும் நினைத்தால் போதாது அவரோட மனநிலைக்கு,எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு ஒத்துப்போகக்கூடிய சக கலைஞர்களின் ஒத்துழைப்பு தேவையானதாக இருக்கிறது...இதில் யாரேனும் ஒருவரால் சிறு தவறு நிகழ்ந்தாலோ அல்லது படைபாளியின் எண்ணஓட்டத்திலிருந்து வேறுபட்டு நின்றாலோ அந்த படைப்புத் தரத்தை குறைத்து மதிப்பிட அதுவும் ஒரு காரணமாகிவிடும்...அதற்காக ஒட்டுமொத்த படைப்பையும்,ஒட்டுமொத்த உழைப்பையும் குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
அதுவும் உலகத்தரத்திற்கு தம்மையே முழுமையாக அர்ப்பணித்து..நம் தமிழ் சூழலுக்கு ஏற்றவாறு தன் நிலைகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்துவரும் கமல் போன்ற மாபெரும் கலைஞனை,அவர் பணியை குறையிட்டு சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
தமிழ்மணம் போன்ற பெரும் வளைத்தளங்களில் பசியாறலாம், உணவு பறிமாறலாம், அதில் எதற்கு விஷத்துளி?
எத்தனையோ வாசகர்கள் ,எத்தனையோ பதிவர்கள் ஒவ்வொரு நொடியும் இதுபோன்ற வளைத்தளங்களை சொடுக்குகிறார்கள்,
ஒருவேளை தேடல்,தேடல் என்று தீரா தாகத்தோடு திரியும் கலைஞானி கமல் அவர்களும் தசாவதாரம் குறித்த விமர்சனங்களை படிக்க நேர்ந்தால்?
அதுவும் "தசாவதாரம் படத்த பார்க்க போனதுக்கு என் புத்தியை செருப்பாலதான் அடிக்கோனும்"போன்ற விமர்சனங்களை பருக நேர்ந்தால்?அவர் மனம் என்னபாடு பட்டிருக்கும்..
படம் பார்த்துவிட்டோ அல்லது கமல் அவர்களை பிடிக்காது போயிருந்தோ இது போன்ற தலைப்பை பதிவிட்டிருக்கிறாரா எனறால் இல்லை "டிக்கெட் கிடைக்காது எழுந்த கோபத்தின் உச்சமாக அல்லது வலைப்பூவின் வசீகரத்திற்காக அப்படி பதிவிட்டிருக்கிறார்..என்ன கொடுமை இது?????!!!
நுனிப்புல் மேய்கிறவற்கள் அந்த தலைப்பைப் பார்த்த்விட்டு நாலு பேரிடம் சொன்னாலே போதும்(படம் சரி இல்ல மாப்ல நெட்ல படிச்சேன்) அந்த நாலு நாற்பதாகி,நாற்பது நானூறாகி இறுதியில் ஆர்வம் குறைந்து cd யில் பார்த்துக்கொள்ளலாம் என முடங்கி விடுவார்களே?
சினிமா இழப்பு என்பது படைப்பாளிக்கு மட்டுமல்ல எங்கோ ஓர் திரை அரங்கில் சுண்டல் விற்கும் ஓர் சிறு வியாபாரிக்கும் அது பாதிப்புதான்..
விமர்சனங்களை நான் குறைசொல்லவில்லை..தேவையற்ற குறைகளை நான் விமர்சிக்கிறேன் அவ்வளவே..
உங்கள் விமர்சனங்கள் கலாச்சாரத்தைப் பாழாக்கும் சினிமாக்களுக்கு வாளாகட்டும்...கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சினிமாக்களுக்கு வேலியாகட்டும்....
உண்மையான கலைஞனை அடையாளம் காணுங்கள் , போலியான கலைஞனை அடிஆழம் போடுங்கள்....








