தேடலும் தேடல் நிமித்தமும்..

Saturday, March 8, 2008






சொல்லியிருக்க வேண்டும்
அவனிடம்!

சக தோழனாய்
என் சரித்திரம் புரிந்தவன்
சதா சர்வமும்
புகைத்தே கழித்தவன்..

சொல்லியிருக்கலாம்தான்...

மூச்சுக்குள் புகை நிரப்பி
தேனீர் தொட்டுக் கொள்ளும்
தெருக் கடைப் பொழுதுகளிலேனும்..

அலுவலக நேரத்து
மிச்சங்களில் எல்லாம்
ஆளாய் பறக்கும்
"ஒரு தம்" நொடிகளிலேனும்...

சின்னதாய் ஒரு உலகம்
சிந்தனை ஊக்கி
எனும்
சிகெரெட் புராண
தருணங்களிலேனும்..

அக்கா பிள்ளை
ஐம்பது பைசா கேட்கும் போதும்
பிச்சைக் கிழவன்
பொக்கை வாய் இளிக்கும் போதூம்
மறுக்கும் அவனது கரங்கள்
கரன்சியை
காகித சாம்பலாக்க
அனுமதிக்கும் நொடிகளிலேனும்...

சொல்லியிருக்கலாம்தான்...

என்ன செய்வது?
கூடி இருக்கையில்
குறைகள் மறைப்பதும்
பிரிவைக் குறை தரின்
குமுறித்துடிப்பதும்
பாழும் மனிதனின்
பழக்கமாயிற்றே!

இருப்பினும்
சொல்லத் தோணிற்று

அவன் குழந்தை
அம்மா என்று
முதல் வார்த்தை முகிழ்க்கையில்
ஆனந்தப்படாத
அவன் மனைவி
அப்பாவை விளித்தால்
என் செய்வேன் என
கதறி அழுத கணத்த நொடிகளில்...

ஆதலால் தோழா....

வேண்டாம் உனக்குப் புகை
அது
எமனின் இன்னொரு வகை..

சுவாசம் என்பது மூச்சு
அதில்
சுத்தம் இல்லையேல் போச்சு...

உன்
விரல் இடுக்கிலேயே
நசுக்கப் படுகிறது
உனக்கான சந்ததி...

உன்னாலேயே
வைக்கப்படுகிறது
உன் ஆண்மைக்கான ஆப்பு...

உன் நரம்புகள் நாசம்
ஜீன்களில் விஷம்
சுவாசம் முழுதும் சாக்கடை....

புகையோடு சேர்த்து எரிகிறது
உன் பொருளாதாரத்தின்
ஒரு பகுதி.....

மறந்துவிடடதே
பிராண வாயுவின்
பிரதாண இடத்தில்
ஆயுளை நீட்டிக்கும்
அறைகளின் உட்சுவற்றில்
தயாராகிறது
உனக்கான ஒரு பாடை...

புகை தேங்கும் காற்றறை
உன் சிதை மூடும்
கல்லறை..

பாவம் உன் இரத்தம்
ஆக்சிஜன் அற்று
நிக்கோட்டின் பிடிக்குள்....

சொல்லிமுடித்துவிட்டேன்..

அவனுக்கு புரிய
வாய்ப்பில்லை
இருப்பினும்
அவன் கல்லறைக்கு அருகில்
அவசர இடம் தேடும்
இன்னொரு
நிக்கோடின் மனிதனுக்கு??!!


1 comments:

said...

etha padicha pirakkum thyruthala na ???????