தேடலும் தேடல் நிமித்தமும்..
Showing posts with label நரபலி கொடுத்தாயிற்று.....ராஜபக்சே. Show all posts
Showing posts with label நரபலி கொடுத்தாயிற்று.....ராஜபக்சே. Show all posts

Monday, May 18, 2009

நரபலி கொடுத்தாயிற்று.....ராஜபக்சே!

புதிய நாட்டை கட்டி எழுப்புவோம் என இன்று ராஜபக்சே அறிவித்திருக்கிறான்....ஆம் அதிகமாய் ஆசைப்படு,பிற உயிர்களை துன்புறுத்து அதுவும் கொடூர முறையில் துன்புறுத்து எனும் புத்தனின் வாக்குத்தத்தத்தை அப்படியே நிறைவேற்றியிருக்கிறானாம் ராஜபக்சே....நரபலியை உலகத்திலேயே எவனும் கொடுக்காதவண்ணம் நாம் புத்தனுக்கு அர்ப்பணித்துள்ளோம்....ஆதலால் ஒரு புதிய புத்த தேசத்தை நாம் கட்டி எழுப்புவோம் என ஆர்ப்பரித்துள்ளான்....இதோ தமிழனின் மண்டைஓடுகளும்,எழும்புத் துண்டுகளும் தயாராயிருக்கிறது புத்ததேசத்தின் பலமான அஸ்திவாரத்திற்கு.....வாருங்கள் அடிமைத் தமிழர்களே நாமும் அவனோடு சேர்ந்து புத்த தேசத்தைக்கட்டி எழுப்புவோம்....வந்தேறிகளுக்காக அயராது உழைப்பதும்...அவர்களுக்கு விசுவாசமாக இருப்பதும் நமக்கொன்றும் புதிதல்லவே!சீக்கிரம் வாருங்கள் அடுத்து வேறு ஒரு வந்தேறியை முன்னேற்றவேண்டாமா...????????????????