இயக்குநர் இமையத்தின் அலுவலகத்தில் இத்தாலி எஜமானியின் நாய்கள் அட்டகாசம்.....
"என் இனிய தமிழ் மக்களே!" உங்கள் பாசத்திற்குரிய பாரதி ராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் ஒருவனும்,சுத்தமான தமிழ்ப் பால் குடித்து வளர்ந்தவனுமான சிவா பேசுகிறேன்....உலகத்தமிழர்களே! கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்..அதுவும் வெளிநாடுகளில் இருந்தால் தயவு செய்து இந்தியாவிற்குள் நுழைந்து விடாதீர்கள்..ஆம்! இத்தாலியிலிருந்து ஒரு எஜமானியம்மா வந்திருக்கிறார்களாம்...தாம் கடித்து துப்பும் எழும்புத் துண்டுகள் வீணாகக் கூடாது என்பதற்காக சில நாய்களை அந்த எஜமானி வளர்க்கிறாராம்.....அந்த எச்சில் துண்டு விசுவாசத்திற்காக அந்நாய்களும் தமிழர்களை மட்டுமே குறிவைத்து தாக்குகிறதாம்.....அப்படித்தான் மே 16 இரவு அந்நாய்க் கூட்டத்தை சேர்ந்த சில வெறிநாய்கள் நம் தமிழினத் தலைவர் திரு பாரதிராஜா அவர்களின் அலுவலகத்தில் புகுந்து அசிங்கம் செய்து வைத்துள்ளது....செய்தி கேள்விபட்டு இன்று காலை நான் இயக்குனர் அலுவலகம் சென்றேன்....செந்தமிழன் சீமான் முதல் திரு பாலசந்தர் வரை அனைவருமே அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தார்கள்....தமிழகத்தின் பல்வேறு தமிழ் அமைப்புகள் இயக்குனரைத் தொடர்புகொண்டு போராட வேண்டும் என கொந்தளித்த போது இயக்குனர் அவர்கள் அமைதிகாக்குமாறு கேட்டுக்கொண்டார்....பரபரப்பான அந்த நிமிடங்களுக்கு மத்தியிலும் ஈழ நிலவரம் குறித்து விசாரித்தபடியே இருந்தார்...நான் கீழே வந்து சிதைக்கப்பட்ட என் பாடசாலையை,என் குருகுலத்தைப் பார்வையிட்டேன்....டப்பிங்,எடிட்டிங் சாதனங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டிருந்தது...நான் நடிகன் என்றபோதிலும் தொழில்நுட்பமும் கற்றுக்கொள்ள உதவி புரிந்தார் இயக்குனர் இமையம்...எனக்கு கற்றுக்கொடுத்த பாடசாலை இன்று சில நாய்களால் அசிங்கப்படுத்தப்பட்டுவிட்டது....நெஞ்சு பொறுக்கவில்லைதான் இருப்பினும் என் செய்வேன்...எதிர்ப்பு சக்தியில்லா ஒரு இனத்தில்,ஒரு இடத்தில் பிறந்துவிட்டேனே..ஆதலால் தமிழர்களே...தயவு செய்து தமிழன் என்று வாயைத் திறந்துவிடாதீர்கள்.....வழக்கம் போல் பயந்து,ஒடுங்கி,அடிமையாகவே இருங்கள்....நாய்கள் ஜாக்கிறதை.........