தேடலும் தேடல் நிமித்தமும்..
Showing posts with label அதிர்வுகள். Show all posts
Showing posts with label அதிர்வுகள். Show all posts

Saturday, August 2, 2008

அமீபா To அகிலாண்டம்

பூமியின் சுற்று அதற்கான விதிகளுடன் தடையுறாது சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது...ஆனால் அதன் முக(ங்கள்)ம் மட்டும் அது சார்ந்த விலங்கின் மிச்சங்களால் கிழிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது,
ஜாதி,மதம்,இனம்,மொழி,விஞ்ஞானம் என அதன் கூர் நகங்களால் குதறப்பட்டுக்கொண்டே வருகிறது.
விஞ்ஞானத்தால் சிற்சில நன்மை இருப்பினும் அதன்வீச்சு பஞ்சபூதங்களையும் பகைத்துவிட்டது.
வானைத்துளைத்து ஓசோன் ஓட்டை இடுவதிலும்,காற்றைக் கிழித்து கார்பன் துகள்கள் நடுவதிலும்,தன் கழிவுகளால் நீரின் மூலக்கூறுவையே மாற்றுவதிலும்,பச்சை விரிக்கும் காடுகள் அழித்து கான்கிரீட் காடுகள் அமைப்பதிலும்,திட வடிவில் நெருப்பை ஏவி குண்டுகள் என கும்மாளமிடுவதிலும்..புல் பூண்டு,புழு பூச்சிகள் முழைக்காவண்ணம் கதிவீச்சுக்களின் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதிலும் என விஞ்ஞானத்தி வீச்சு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது...
எங்கும் வன்முறை ,மனிதனை மனிதனே கொன்று குவிக்கும் பயங்கரம்,சுடப் பட்டும்,சுட்டுக்கொண்டும் இருக்கும் கொடூரம் என இதே நிலை இன்னும் நீடித்தால் மூன்று பகுதி நீரால் நிரம்பியிருக்கும் பூமி மிச்சமுள்ள ஒரு பகுதியையும் நீரால் நிரப்பக்கூடும்,அந்த நீர் மனித இனத்தின் கண்ணீராகவும் மானுடக்குருதியின் செந்நீராகவும் இருக்கக்கூடும்.
அட மனிதப்பாவிகளே!
உலகம் இப்படித்தான் இருந்தது என்று நாளைய உயிருக்கு எடுத்துச் சொல்ல ஓர் உயிர்தடையத்தையாவது விட்டுச் செல்வோமே..!!!
ஏனெனில் இனி சாத்தியமில்லை அமீபா தொடங்கி,அகிலமும் நிரம்பும் பரிணாம வளர்ச்சி.


Sunday, July 27, 2008

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருடன் சந்திப்பு


இயக்குனர் இமையம் திரு பாரதி ராஜா மற்றும் மலேசிய அமைச்சர் திரு டத்தோ சாமிவேலு ஆகியோருக்கான தசாவதார படத்திற்கான சிறப்புக் காட்சி four frames studio வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.....இயக்குனர் இமைய உபயத்தால் அடியேனும் அந்த சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டேன்....அப்பொழுது இயக்குனர் திரு கே.எஸ்.ரவிகுமார் அவர்களை சந்தித்து இணையதள விமர்சனங்கள் குறித்து விவாதித்தேன்....சில விமர்சனங்கள் அவரை பாதித்துள்ளது....முன்னதாக அவரது அயராத உழைப்பின் சாதனைக்கு தலைவணங்கினேன்....இணையதள விமர்சனங்கள் குறித்த எனது பதிவையும் அவரிடம் காண்பித்தேன்...
(அலை பேசியில் படம் பிடித்தவர் அறைகுறையாய் படம்பிடித்துவிட்டார்)


Sunday, April 15, 2007

வித்தியாசம்...!

என்னை வியர்டு விளையாட்டுக்கு அழைத்த திருமதி மங்கை அவர்களுக்கு நன்றி...!வித்தியாச குணங்களை வரிசைப்படுத்துமாறு வேண்டுகோள்...இதோ தொடர்கிறேன்...

வித்தியாசம் என்பதே புதுமையின் வெளிப்பாடுதான்..வழக்கமான யதார்த்தத்திலிருந்து புதியதாய் ஓர் யதார்த்தம் சேர்க்கும் முயற்சி...வித்தியாசம் என்பது மட்டும் இல்லையெனில் நாம் இன்னும் அம்மணமாய்த்தான் அலைந்து கொண்டிருப்போம்..
ஆதி மனிதன் அவன் போக்கில் அலைந்து திரிகையில் யாரோ ஒருவன் மட்டும் அம்மணத்தின் அவஸ்தயை உணர்வதில் வித்தியாசப் பட்டிருக்கிறான்..அதன் பிறகே நாம் இலை ஆடை தரித்து சில இம்சைகள் தவிர்த்தோம்..
ஆம்..! எடிசனின் வித்தியாசம் ஒளியை விரித்தது..ஒளி இந்த உலகயே விரித்தது....அந்த விரிந்த உலகமோ ஓர் எலியின் பிடிக்குள்(அதாங்க computer mouse)....என்ன விந்தை இது ஓர் எலியைப் பிடித்து வைத்து இந்த உலகையே உட்கொள்கிறோம்!....



எனது வித்தியாசம் என் பால்யத்திலேயே தொடங்கிற்று எனலாம்..
எப்பொழுதெல்லாம் என் தாயார் என்னையும்,என் தங்கையின் காதில் புள்ளியாய்த் தெரியும் வடுவையும் ஒன்றாய் பார்க்க நேர்கிறதோ அப்பொழுதெல்லாம் என்னை செல்லமாய் திட்டும் வார்த்தை "பாவி பய பால பூராம் குடிச்சிட்டு தங்கச்சிய மட்டும் நோஞ்சான் ஆக்கிட்டான்" என்பதுதான்..
ஆம்! நான் குழந்தயா இருக்கச்சே தாய்ப்பால் தவிர வேற எந்த உணவும் எனக்கு ஆகாதாம்,சதா சர்வகாலமும் தாய்ப்பாலே உணவாக கிடந்திருக்கிறேன்...
எனது உயிரை நீட்டிக்க தன் உயிரையே சமைத்துக் கொடுத்திருக்கிறாள் அந்த தாய்..தன் உயிர் உருகி வெள்ளை ரத்தமாய் கசியும் அவ்வமுதை நான் உறிஞ்சும் போதெல்லாம் ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் என் தாய் ..அவ்வமுது தவிர வேறெதுவும் உணவாய்ப் படாததால்,நான் பக்குவப் பட்ட பின்னும் பால் தருவதைத் தொடர்ந்திருக்கிறாள்..என் விழிகள் சுரக்காதிருக்க அவள் அமுது சுரந்தாக வேண்டும்.... இது என் தங்கையின் பிறப்புக்கு பின்னும் தொடர்ந்திருக்கிறது...
ஓர் நாள் அமுதைத் தேடி அம்மாவை நெருங்குகிறேன் அங்கே என் தங்கை தன் ஆயுளை நீட்டித்து கொண்டிருக்கிறாள்..நான் அருகில் சென்று விலக்கியும் அவள் அமுது சுவைப்பதை நிறுத்தவில்லை..
மார்போடு என்னை அணைத்து பாலை மட்டுமல்ல பாசத்தையும் ஊட்டும் அந்த சுகம் கிடைக்காதோ என்ற ஆத்திரத்தில் எனக்குமட்டுமே சொந்தம் எனும் ஏகபோக உரிமையில்..அருகில் கிடந்த பாத்திரத்தை வீசியிருக்கிறேன்...அது ஒரே நேர்கோட்டில் ஓங்கி கிழித்திருக்கிறது என் தங்கையின் செவியை..
இரத்தம் சொட்ட சொட்ட என் தங்கை அழுது துடித்திருக்கிறாள்..
பின் என் தங்கை புட்டிப் பாலுக்கும் நான் மீண்டும் தாய்ப் பாலுக்கும் மாற்றப்பட்டிருக்கிறோம்... இப்படி வில்லத் தனமாய்த்தான் ஆரம்பித்திருக்கிறது எனது வித்தியாசம்..
சென்ற தீபாவளிக்கு ஊருக்கு சென்று தங்கையைப் பார்த்தேன் தாய்மையின் மகிழ்ச்சியில் நெஞ்சோடு அணைத்திருந்தாள் அவளின் குட்டி தேவதையை...அருகில் தன் தாயின் செவிகளை வருடிக் கொண்டெ
" புட்டிப் பாலை"ருசித்துக் கொண்டிருந்தான் என் மருமகன்...உன் தங்கையை எடுத்து செல்லவா என்று விளையாட்டுக்காய் அவனிடம் கேட்டு தங்கயைத் தொட முயல்கிறேன் அவன் புட்டியை எடுத்து வீச முற்படுகிறான்...நான் சிரித்துக்கொண்டேன் ..மாமனுக்கு ஏத்த மருமகன்தான்..!


என் தந்தையின் நெஞ்சு முடிகளில் நீந்திய காலங்களில் அவரின் செல்லக் கொஞ்சல்களுக்கிடையில் என்னை செதுக்கவும் முயற்சிப்பார்..கருஞ் சிலேட்டில் வெள்ளையாய்க் கோடுகள் கிழித்து கொக்கு,குருவிகள் அறிமுகம் செய்து வைப்பார்..நாமும் செய்தால் என்ன?நானும் முயற்ச்சித்து ஒருமுகப் பட்டேன்..எனது கலைக்கான முதல் சுழி அந்த கருஞ் சிலேட்டில் அன்றே பதிவாயிற்று...( pencil drawing state level price வாங்கியிருக்கேன்,...)
எனது உயர்கல்வி பருவம்...., இலங்கை வானொலி நேயர்களின் சொந்த கவிதையை சினிமா பாடல்களின் மெட்டிற்கு ஒலிபரப்பிய நேரம்..அட நாமும் செய்தால் என்ன? என்ற எண்ணத்தில் ஒரு பாடலை எழுதினேன்.....
வீட்டில் மட்டுமல்ல வகுப்பிலும் எனக்கான அங்கீகாரம் கிடைத்தது..எனது முதல் எழுத்து அன்று பதிவாயிற்று...குமுதம் bookல எனது கானா வந்திருக்குன்னா அதுக்கு காரணம் அக்கவிதை மற்றவற்றிலிருந்து வித்தியாசப் பட்டிருப்பதுதான்...
எங்க ஊர் பாண்டியப்பா டீக்கடையில பல குரல் கேசட் போட்டாச்சுன்னா மொத ஆளா ஓடிப்போயி கேசட் முடியிற வரைக்கும் கேட்பேன்...ஒரே ஆளு இத்தன குரல் பேசுராங்களே..நாமும்தான் பேசுவோமே என முயற்ச்சித்தேன்...ஓட்டு வீட்டு உள் மாடியில் ஓங்கி கத்த ஆரம்பித்தேன்....
பிறகு எங்கள் பள்ளியின் hostel dayல் முதன் முதலாக mic பிடித்து mimic செய்தேன்.....அது தொடர்ந்தது பல மேடைகளில்....எனது இந்த வித்தியாசம்தான் என்னை தமிழ் சினிமாவின் heroவாக்கியது..எனது இந்த வித்தியாசம் தான் எங்கோ ஓர் வயல்வெளியின் மண் காத்துக் கிடந்த என் ஏழைப் பெற்றோரை AVM studioவின் சான்றோர்கள் மத்தியில் பெரிதுவக்கச் செய்தது........பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்காமல் நாட்கள் நீண்ட போதிலும் தளராது நான் தரமாகிறேன் என்றால் அதற்கு காரணமும் இந்த வித்தியாசம்தான்..என் படத்தைப் பற்றி அறிய www.chennaionline.com/film/newlaunches/04passport.asp (passport என்பது படத்தின் பெயர்)







குறும்புத்தனம் ! இன்றும் என்னுள் ஒட்டிக் கொண்டிருப்பது...என்னையே என்னுள் refresh செய்வது.....இது வித்யாசத்தை மட்டுமல்ல வில்லங்கத்தையும் ஏர்படுத்தக்கூடியது...(எ.கா) பொதிகை மலையின் நீர் பரப்பில் நண்பர்களோடு எனது பொழுதுகள் மகிழ்ச்சியாய் விரிந்த காலம் ஓர் சாரல் பொழுது கவனிப்பாரற்று calm மாய் கழிகிறது.....போரடிப்பதாய் நண்பர்கள் சொல்ல நான் வித்யாசம் தேடினேன் .....மற்ற மக்கள் ஏதோ குளிக்க மட்டுமே வந்தவர்கள்போல் குளித்துக் கொண்டிருக்க.....அவர்களின் கவனம் எங்கள் மீது திரும்ப ஓர் வித்யாசம் உதித்தது...
ஆம்...நண்பர்கள் அனைவரயும் இலை தளை தரித்து ஆதி மனிதன் போல் getup change செய்தேன்......இலை ஆடை தரித்து கைகளில் இலைகளுடன் ஹோஹோ.....ஹொய்யாலா..ஹோ ஹோ ....என கோரசாக பாடி ஆடவும் செய்தோம்......அவ்வளவுதான் மொத்த கூட்டமும் அந்த வித்யாசம் கண்டு வியந்து தங்கள் சந்தோஷத்தைப் புதுப்பித்தார்கள்....கல கலப்பாய் அந்த பொழுதும் கழிந்தது....
எ.கா.2:கன்னியாகுமரி...விவேகானந்தரின் ஞானஸ்தலம்.....நண்பர்களோடு நானும் சுற்றிப் பார்க்கிறேன் ....எனக்குப் பின்னால் சில வெளிநாட்டார்கள் தஸ் புஸ்சில் வந்து கொண்டிருந்தார்கள்...அவர்களைக் கலாய்க்க வேண்டும் என் செய்வது ? வித்யாசம் தேடினேன்.....அவர்கள் எங்களைத் தொடர்வதை சாதகமாக்கிக் கொண்டேன்....ஒவ்வொரு இடமாய் பார்த்து வருகிறோம் பின்னால் அவர்கள்.....ஓர் இடத்தில் வெறும் பாறை வெயிலை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது அதுவரைக்கும் அது சாதாரணப் பாறைதான் ஆனால் என் குறும்புத்தனத்தால் அதை தெய்வாமாக்கி தொட்டு கும்பிட ஆரம்பித்தேன் என் தோழர்களும் அதையே செய்தனர்....பாவம் தொட்டு வணங்க அந்த வெள்ளையர்களும் தயார்...எங்களுக்கு சிரிப்பாய் வந்தது..அந்த வணங்குதலை உள்வாங்கிக் கொண்டு எங்கள் வாய்களுக்குப் பூட்டு வைத்தோம்...பிறகு எங்களைப் பார்த்தார்கள் மீண்டும் வித்தியாசம் தேடினேன்..அந்த உச்சி வெயிலில் அப்படியே உக்காந்து தியானம் செய்ய ஆரம்பித்தோம்.....மெல்ல கண்கள் திறந்தால் அவர்களும் உச்சி வெயிலை பொருட்படுத்தாது தியானித்திருந்தார்கள்....பாவம் அவர்கள் நம் மீது வைத்த நம்பிக்கை அது..நாசம் செய்தது இப்பொழுது புரிகிறது....பகவான் எங்களை மன்னிப்பாராக!..இன்னும் குறும்புத்தனங்களை பதியலாம்....உங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டே..!.

சரி எனப்பட்டால் எதுவரினும் எதிர்கொள்வேன்.....
st.xaviers autonomous college இப்படிசொல்லும் போதே என் நெஞ்சு நிமிரும்....ஓர் கவுரவம் பிறக்கும்...அப்படியோர் புனித கல்லூரி எங்கள் கல்லூரி....ஜாதீய தூசுகள் சிறிதும் இல்லாத சமத்துவக் கல்லூரி அது...ஆனால் எங்களுக்குள்ளும் ஜாதீயம் சதி செய்தது.....ஓர் chairman election என் சார்பில் எனது நண்பன் நிற்கிறான் சமூக முத்திரைப்படி அவனும் நானும் வேறு ஜாதி...எதிரணியிலும் எனக்குத் தெரிந்த நண்பன்தான் சமூக முத்திரைப்படி அவனும் நானும் ஒரே ஜாதி.....இப்பொழுது கவுரப் ப்ரச்சனை தலையெடுக்கிறது...என் ஜாதிக்கு எதிரானதால் எதிரணி என்னை துரோகி என முத்திரைக் குத்துகிறது......என்னோடு இருந்த என் ஜாதியர் பலரும் எதிரணியில் ஆஜர்....நான் மட்டுமே தனித்து என் நட்புக்காய் துணிகிறேன்..
தேர்தல் நடக்கிறது எதிரணி அரசியல் முக்கியப் புள்ளியின் வாரிசு என்பதால் கல்லூரி வாசலில் ஆசிட் முட்டை சகிதம் அடியாட்கள்...இருப்பினும் அவர்களை உசுப்பேத்த வாடைகைக்கு தவில் எடுத்து வந்து நானும் நண்பர்களும் கச்சேரியைத்தொடங்கினோம்...எங்கள் கல்லூரிக்கு அது புதுசுதான்....இருப்பினும் எங்கள் விபரீதத்தைப் பெருக்கினோம்....எது வரினும் எதிர்கொள்வோம் எனும் நம்பிக்கையில் தேர்தல் முடிவுக்காய் காத்திருந்தோம்....முடிவு எங்களுக்கு சாதகமானதால் ஓர் கலவரம் கணநேரத்தில் நடந்து முடிந்தது.....இப்படி சரியெனப்பட்டால் துணிவதும் துணிந்தபின் தயங்காது தொடர்வதும் இன்னும் தொடர்கிறது....

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாது வெளிப்படையாய் இருப்பாதால்தான் இன்றும் எனக்கான நண்பர்கள் என் உயிரோடு கலந்திருக்கிறார்கள்.....யார் எங்கே என்றெல்லாம் கிடையாது மனதில் உள்ளதை அப்படியே வெளிக்கொணர்வேன்...

அப்பாட முடிச்சாச்சு...


Sunday, December 31, 2006

புதுப்பிக்கிறோம் !


இனியொரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்....
தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை .........
இந்த ஜகத்தினை......................?
வேண்டாம் பாரதி வேண்டாம்....
இனி ஜகம் அழியாது காப்பதே எங்கள் பொறுப்பு...
காய்ந்த வயிறுகளுக்காய்
எங்கள் கரங்கள் சேர்ப்போம்....
சாய்ந்த மனிதன் இல்லா புதுச் சாலைகள் படைப்போம்......
ஆம் !
புதுப்பிக்கிறோம் உன் விதியை
இந்த இனிய புத்தாண்டில்.....






Saturday, December 16, 2006

இப்படிக்கு ஆயுள்கைதி!

"கடிதம்" இந்த சொல் இப்பொழுது வழக்கில் உள்ளதா என்பதே சந்தேகம்தான்..! கால மாற்றம் சிலவற்றை சுருங்கச் செய்துவிட்டது.. அப்படி சுருங்கியவற்றுள் இதுவும் ஒன்றாக இருக்கலாம்....

கடிதம் என்பதே ஓர் இலக்கியம் என்பதை இங்கே எத்தனை பேர் அறிவோம்? அது கதை சொல்லும் , காதல் சொல்லும் , நட்பு சொல்லும்.......,

சந்தோஷம், அழுகை, கோபம், தாகம், வெட்கம் , ஏக்கம், தவிப்பு, என உணர்ச்சிகள் சொல்லி உயிரை நீட்டிக்கும்....

கடிதம் என்பதே உறவுகளைப் புதுப்பிக்கும் ஓர் களம் அல்லவா?

கனவுகள் பூப்பிக்க, கற்பனை தருவிக்க, கடந்த காலத்து மிச்சங்களை....,

காலச்சுவடுகளில் நம்மைப் பற்றிய பதிவுகளை....., நம்மை நாமே அறிந்துணரும் ஓர் பொக்கிஷம் அல்லவா..!

புல்லரிக்க செய்வதும், பூப்பூக்க செய்வதும், செல்லரிக்க செய்வதும், செத்துப்போக செய்வதும் கடிதம் அன்றி வேறேது?..

உன்னை நீ அறியவும் , மற்றவர் உன்னை அறியவும்,..அறிதலும் அறிதல் நிமித்தம் பணித்தலும் கடிதம்தானே!

கடிதம் நம் இறந்த காலத்து உயிர்ப் பிம்ம்பங்களை நிகழ்காலத்தில் காணச்செய்யும் அதிசயக் கண்ணாடி !

இப்பேர்பட்டக் கடிதத்தை நம்முள் எத்தனை பேர் இன்று எழுதுகிறோம் ???? நாம்தான் நினைத்த உடனேயே தொலைவில் இருப்பவரை தொடர்பு எல்லைக்கு உட்பட்டவராக்கி தொலைபேசியில் தொடர்கிறோமே! பிறகு எங்கே கடிதம் எழுதுவது...?
சரி!சரி! விஷயத்திற்கு வருகிறேன்..எத்தனையோ கடிதங்கள் நம்மைப் பாதித்ததுண்டு, பாதிப்பதுண்டு..
அப்படி சமீபத்தில் என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது ஓர் கடிதம்....
from வேலுர் மத்திய சிறை என்ற சுயத்தோடு நம்பிக்கை என்ற விலாசத்திற்கு மன்னிக்கவும் ஜனா என்ற சிறுவனுக்கு வந்திருந்தது அக்கடிதம்...
அன்புள்ள ஜனாவுக்கு எனத் தொடங்கும் அக்கடிதம் பல உணர்ச்சிக் கவிதைகளை உள்ளடக்கி இப்படிக்கு ஆயுள் கைதி என முடிந்திருந்தது...
யார் இந்த ஜனா ?


6 வருடங்களுக்கு முன்பு வரை எல்லோரையும் போல் துள்ளிக்குதித்தவன் தான் இந்த ஜனா எனும் சாதா சிறுவன் ஆனால் இன்றோ இரு கைகள் ஒரு கால் என முக்கிய அவயம் முழுதும் இழந்து முடமாய் அல்லாது முயற்சியால் உயர்ந்து நிற்கும் சாதனைச்சிறுவன்..

அச்சிறுவனுக்குத்தான் ஆயுள் கைதியின் மடல்......
ஆம் ஓர் மின்சார விபத்தில் முடமானான்...ஆனால் அவனோ கைகள் இல்லா விடில் என்ன முடங்காது தன் வாயால் எழுத்துக்களை, வண்ணங்களை,எழுத ஆரம்பித்தான்..
இன்றோ இருமுறை ஜனாதிபதி விருதும்...பல ஓவியப்போட்டிகளுக்கு நடுவராகவும் உயர்ந்து நிற்கிறான்.
இவன் சாதனை எல்லாப் பத்திரிக்கைகளிலும் பதிவாகியுள்ளது..அப்படியோர் பதிவுதான் இந்த ஆயுள் கைதியைப் பாதித்துள்ளது...அதன் விளைவுதான் இம்மடல்..
அதிலும் குறிப்பாக ஆயுள் கைதியின் ஓவியம்,உயர்தர வரிகள்...என்னை மிகவும் பாதித்தது...
"என் இரு கைகளையும் உனக்குத் தருகிறேன் பதிலுக்கு உன் நம்பிக்கையை எனக்குத் தா என அந்த கைதி வேண்டுவது உணர்ச்சியின் உச்சம்!....(ஒரு குறும்பட தகவலுக்காக அந்த சாதனை சிறுவனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது...அப்போதுதான் அக்கடிதம் பார்த்தேன்)
ஜனாவைப் பற்றிய நிஜங்கள் அறிய இங்கே சுட்டவும் www.azhagi.com/jana ....


Sunday, November 26, 2006

ஊர்க்குருவி

நாம் என்ன பருந்தா உயரப் பறந்து உலகை ரசிக்க..
ஊர்க்குரிவிதானே என இதுநாள் வரைக்கும் என் சிறகை விரிக்கும் முயற்சியற்று முடங்கிக் கிடந்தேன்,ஆனால் வலைப்பதிவு எனும் வானம் எனக்காய் விரிந்து கிடக்கையில் நாம் ஏன் பருந்தாகும் பயிற்சி எடுக்க கூடாது?இதோ சுயமாய் நான் முயற்சிக்கிறேன்...உங்களோடு நானும் சேர்ந்து என் பயணத்தை தொடர.....