தேடலும் தேடல் நிமித்தமும்..
Showing posts with label அமீபா To அகிலாண்டம். Show all posts
Showing posts with label அமீபா To அகிலாண்டம். Show all posts

Saturday, August 2, 2008

அமீபா To அகிலாண்டம்

பூமியின் சுற்று அதற்கான விதிகளுடன் தடையுறாது சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது...ஆனால் அதன் முக(ங்கள்)ம் மட்டும் அது சார்ந்த விலங்கின் மிச்சங்களால் கிழிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது,
ஜாதி,மதம்,இனம்,மொழி,விஞ்ஞானம் என அதன் கூர் நகங்களால் குதறப்பட்டுக்கொண்டே வருகிறது.
விஞ்ஞானத்தால் சிற்சில நன்மை இருப்பினும் அதன்வீச்சு பஞ்சபூதங்களையும் பகைத்துவிட்டது.
வானைத்துளைத்து ஓசோன் ஓட்டை இடுவதிலும்,காற்றைக் கிழித்து கார்பன் துகள்கள் நடுவதிலும்,தன் கழிவுகளால் நீரின் மூலக்கூறுவையே மாற்றுவதிலும்,பச்சை விரிக்கும் காடுகள் அழித்து கான்கிரீட் காடுகள் அமைப்பதிலும்,திட வடிவில் நெருப்பை ஏவி குண்டுகள் என கும்மாளமிடுவதிலும்..புல் பூண்டு,புழு பூச்சிகள் முழைக்காவண்ணம் கதிவீச்சுக்களின் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதிலும் என விஞ்ஞானத்தி வீச்சு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது...
எங்கும் வன்முறை ,மனிதனை மனிதனே கொன்று குவிக்கும் பயங்கரம்,சுடப் பட்டும்,சுட்டுக்கொண்டும் இருக்கும் கொடூரம் என இதே நிலை இன்னும் நீடித்தால் மூன்று பகுதி நீரால் நிரம்பியிருக்கும் பூமி மிச்சமுள்ள ஒரு பகுதியையும் நீரால் நிரப்பக்கூடும்,அந்த நீர் மனித இனத்தின் கண்ணீராகவும் மானுடக்குருதியின் செந்நீராகவும் இருக்கக்கூடும்.
அட மனிதப்பாவிகளே!
உலகம் இப்படித்தான் இருந்தது என்று நாளைய உயிருக்கு எடுத்துச் சொல்ல ஓர் உயிர்தடையத்தையாவது விட்டுச் செல்வோமே..!!!
ஏனெனில் இனி சாத்தியமில்லை அமீபா தொடங்கி,அகிலமும் நிரம்பும் பரிணாம வளர்ச்சி.