தேடலும் தேடல் நிமித்தமும்..

Monday, May 18, 2009

கலங்கிய வைகோ...

இன்று காலை இயக்குநர் இமயத்தின் அலுவலகம் சென்றேன்....தமிழ்த் துரோகிகளால் சிதைக்கப் பட்ட நிலையிலேயே அலுவலகம் இருந்தது...டப்பிங் வேறு ஸ்டூடியோவில் நடைபெற்றது....நடிகரும் இயக்குநருமான திரு ஆர்.சுந்தரராஜன் ,இயக்குநர் திரு கெளதம்(சந்தனக் காடு இயக்குநர்)ஆகியோர் முன்னதாகவே வந்துவிட்டார்கள்...பிறகு சட்டக் கல்லூரி மாணவ தலைவர்களும் இயக்குனர் இமையத்தை சந்தித்தனர்.....தலைவர் வைகோ வருவது எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் நாங்கள் கீழ் தளம் வந்து அவரை வரவேற்றோம்..சிதறிக்கிடந்த அலுவலகத்தைப் பார்வையிட்ட திரு வைகோ பெரிதும் வருந்தினார்.பிறகு இயக்குநர் இமயத்திடம் நெடுநேரம் விசாரித்துக்கொண்டிருந்தார்...அதன்பிறகு வெளியில் வந்த திரு வைகொவிடம் இயக்குநர் கெளதம் ஈழம் குறித்து அடுத்து என்ன என கேட்டபொழுது....திரு வைகோவிடம் நான் பதிலை எதிர்பார்த்தேன் ஆனால் மாறாக வார்த்தைகள் வருவதற்கு பதிலாக அவரது கண்கள் கலங்கிற்று...வார்த்தைகள் எதுவுமே பேசாமல் இயக்குநர் கெளதமை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டு,எங்கள் கரங்களையும் இறுகப் பிடித்தபடியே கண்கலங்கி வெளியே சென்றார்...இறுகியது அவரது நெஞ்சம் மட்டுமல்ல எங்களது நெஞ்சமும்தான்.......


0 comments: