தேடலும் தேடல் நிமித்தமும்..

Saturday, January 5, 2008

முதிர்கன்னி


விரும்பிய படியே
மணாளன் அமைய
விரும்பும் பாவையர்
ஒன்று கூடி
இருக்கும் நோன்பே
பாவையர் நோன்பென்றும்

கடவுளை விரும்பிய
ஆண்டாள் கூட
கண்ணனை அடைந்தாள்
என்பதுதான்
இந்த நோன்பின் சிறப்பென்றும்

மார்கழி தோறும்
நோன்புகள் இருந்து
மணாளன் நோன்பைத்
தொடர்கிறாயே அக்கா..!

அகவை நாற்பதைத்
தாண்டியபின்னுமா
புரியவில்லை
நோன்பின் சிறப்பு.?


0 comments: