தேடலும் தேடல் நிமித்தமும்..

Wednesday, November 29, 2006

பிறவி குணம் (சிறுகதை)

தனிமையும் தமிழும் எனக்கு மிகவும் பிடித்தவை அதுவும் இரண்டும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டால் ஏக ச்ந்தோஷந்தான்.... ..
அந்த சந்தோஷ நாட்களில் எத்தனையோ கதைகளோடு வழ்ந்திருக்கிறேன்,
எத்தனையோ கவிதைகளோடு ஒன்றியிருக்கிறேன்,
எத்தனையோ கட்டுரைகளை உணர்ந்திருக்கிறேன்,

இருப்பினும் ஒரு ஆதங்கம்... எடுக்கும் எனது மூளைக்கு கொடுக்கும் சக்தி இல்லையோ என்றுதான் ..
படிக்கும் சக்தி இருக்கும் எனக்கும் படைக்கும் சக்தி இருக்கிறதா என்ற நிலை அறிய நானும் சிந்திக்க தொடங்கினேன்..
வாழ்க்கையை உணர்த்தும் நிகழ்வுகளை கதையாக்கும் முயற்சியில் கரு தேடலானேன்..
இரவு நெடுநேரம் மூளையைப் பிசைந்தும் எவ்வித பொறியும் தென்படவில்லை..
காத்திருந்த தூக்கத்திற்கு வழிவிட்டு நிசப்தமானேன்..

காலை 7 மணிக்கெல்லாம் என்னை உசுப்பிவிட்டு காலம் தவறாது தன் கடமை செய்தது கடிகாரம்...சோம்பல் முடித்து, டீயைக் குடித்து காலை கடன் முடிப்பதற்குள் மணி 8 ஐத் தாண்டியிருந்தது.. பரபரப்பும் படபடப்பும் கலந்த நிலையில் கம்பேனிக்குத் தயாரானேன்.....

ப்ரோமொஷன் கிடைத்த மகிழ்ச்சி, புதிய பதவியின் புத்துணர்ச்சி இன்னும் என்னை அவசரப்படுத்தியது..
கிளம்பினேன்.. தினமும் வாசல் வந்து வழியனுப்பும் அம்மாவை நோக்கினேன்...

அதற்குள்...." என்னடா இந்த நேரத்துலயா கெள்ம்புறது? இன்னிக்கு நீ காலண்டரப் பாக்கல 9 மணி வரைக்கும் எம கண்டம்னு போட்டிருக்கு..
இப்ப போயி கெளம்புதம்னு சொல்லுத..
இன்னிக்குதான் பெரிய ஆபிசரா வேலைக்கு போற..
கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்ரமா போ வேண்டியதான.."
சொல்லிவிட்டு நகன்றாள் அம்மா...
அம்மாவின் நம்பிக்கையை அலசிப்பார்த்தேன் மூடநம்பிக்கையின் உச்சம் தெரிந்தது...

இன்னும் தொடர்கிற்தே இந்த அவலம் என்ற ஆதங்கத்தோடும்,ஒருவேளை நல்ல நேரத்தில் கிளம்பி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால்? எனும் கேள்விகளோடும் கடிகாரம் பார்த்தேன் எமகண்டத்தை முடித்து வைத்திருந்தது..

மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொண்டேன் நல்லநேரத்தில் அசம்பாவிதம் நடந்தால்? தெளிவாய் கிளம்பினேன் இரவு விட்டுப்போன கதைக்கான கருவோடு..
அலுவல் நேரத்து மிச்சங்களில் எல்லாம் கருவை வளர்க்க ஆரம்பித்தேன்..
அலுவல் முடிந்து வீடு வந்தேன்..கதையை ப்ரசவித்தேன்..

மூடநம்பிக்கையே கதையின் கரு என்பதால் அதையே பெயராக்கி மீண்டும் ஓர் முறை வாசித்துப் பார்த்தேன்...
நிறைவான திருப்தியோடும், நிச்சயம் நம் கதை பிரசுரமாகும் எனும் நம்பிக்கையோடும் அந்தப் பிரபல இதழின் முகவரி பதித்து விடியலுக்காக காத்திருந்தேன்..

பொழுதும் புலர்ந்தது...ஆபிஸ் செல்லும் முன் முதல் வேலையாக போஸ்ட் ஆபிஸ் சென்று நம் கதையை அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடும் ,
முதல் படைப்பாயிற்றே என்ற ஆராவாரத்தோடும் இன்றும் அவசரமானேன்...

இதோ...இதோ... கிளம்புகிறேன் ..வாசல் வந்து வழியனுப்ப அம்மாவும் ரெடி.. கிளம்புகிறேன்..

முடியவில்லை ஒரு சிறு உறுத்தல் "இது நான் அனுப்பும் முதல் படைப்பு, இது ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் அடுத்தப் படைப்பு ஆனந்தமாய் தொடரும்.."எதற்கும்......எதற்கும்.....காலண்டரைப் பார்க்கலாமா?..காலண்டரை நெருங்குகிறேன்...

கொட்டை எழுத்துக்களில் தெளிவாய்த் தெரிந்தது இன்று கரிநாள் என்று...

வேறு என்ன செய்ய நல்ல நாளுக்காய் காத்திருக்கிறேன்.....


Sunday, November 26, 2006

அன்பு

மனிதனை
நேசிக்கும் மரபு
மனதில் பூக்கும்
மாண்பு
உயிரை துலக்கும்
விசித்திரம்
ஆயுளை நீட்டிக்கும்
அமிர்தம்
உணர்ச்சிகளின்
டானிக்...........


ஊர்க்குருவி

நாம் என்ன பருந்தா உயரப் பறந்து உலகை ரசிக்க..
ஊர்க்குரிவிதானே என இதுநாள் வரைக்கும் என் சிறகை விரிக்கும் முயற்சியற்று முடங்கிக் கிடந்தேன்,ஆனால் வலைப்பதிவு எனும் வானம் எனக்காய் விரிந்து கிடக்கையில் நாம் ஏன் பருந்தாகும் பயிற்சி எடுக்க கூடாது?இதோ சுயமாய் நான் முயற்சிக்கிறேன்...உங்களோடு நானும் சேர்ந்து என் பயணத்தை தொடர.....